சமுத்திரத்தின் அக்கரையை அனுமன் அடைதல்
இவ்வாறு தனக்கு ஏற்பட்ட மூன்று தடைகளையும் தன் மதியூகத்தால் வெற்றிகரமாகக் கடந்துவிட்ட அனுமன் நூறு யோஜனை தூரத்தைக் கடந்திருந்தார். அப்போது நாலாபுறத்திலும் தன் பார்வையைச் செலுத்தினார் அஞ்சனை மைந்தன். அடுக்கடுக்கான காடுகளைக் கண்டார்.