Sarva Praharanayuthan

One who uses everything as his weapon!

Spiritual

மாருதி ஆகாய மார்க்கமாக தன் பயணத்தைத் தொடங்குதல்.

மாருதி தன் உடல் ரோமங்களைச் சிலிர்த்துக் கொண்டார். நீரைக் கொண்ட கரிய மேகம் போல கர்ஜித்தார். அடிமுதல் நுனிவரை முடிகளைக் கொண்ட தன் வாலினை சுழற்றி உதறினார். நீண்டு பெரியதாய் இருந்த அவருடைய வாலானது பெரிய சர்ப்பம் போல இருந்தது. வெகுதூரம் வரையில் தான் செல்ல வேண்டிய இடத்தினை நிமிர்ந்து உற்று பார்த்து தன் இதயத்தில் பிராணவாயுவை நிறுத்திக் கொண்டார். பின்னர் ஆகாசத்தில் தாவும் முன்னர் வானர வீரர்களைப் பார்த்துப் பின்வருமாறு கூறலானார், “வாயு வேகமுள்ள ராமபாணம் […]

சமுத்திரத்தைத் தாண்ட அனுமன் ஆயத்தம் ஆதல்!

ஜாம்பவானால் தூண்டப்பட்ட ஆஞ்சநேயர் சாரணர்கள் சஞ்சரிக்கும் ஆகாய மார்க்கத்தில், ராவணனால் அபகரித்துச் செல்லப்பட்ட தேவி சீதை இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க விரும்பினார். அளவற்றதாய் சரீரத்தை வளர்த்துக் கொண்ட ஆஞ்சநேயர், சமுத்திரத்தைத் தாண்ட, அம்மலையை தன்னுடைய கரங்களாலும் கால்களாலும் அழுத்தினார்.

Kanakadhaara Stothram Tamil by Kavignar Kannadasan

கனகதாரா ஸ்தோத்திரம் ஸ்ரீஆதிசங்கரரால் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டது. இதை தமிழில் கவிஞர் கண்ணதாசன் மொழிபெயர்த்தார். கனகதாரா என்ற சொல்லுக்கு பொன் மழை என்று பொருள். இதைப் பாராயணம் செய்திடுவதன் மூலம் வாழ்விற்குத் தேவையான பொருள் தடையின்றி கிடைக்கும் என்பது நிச்சயம்.

Madhuraashtakam

இறைவன் குழந்தைக் கிருஷ்ணரின் திருமேனி மற்றும் லீலைகள் யாவும் தேன் போல இனிமையானவை என விவரிப்பதே மதுராஷ்டகம் ஆகும். மதுரம் என்ற சொல்லுக்கு தேன் அல்லது தேன் போன்ற இனிமையான என்ற பொருள் ஆகும்.

Birth of Shri Vishnu Sahasranama

தர்மம் குறித்து தான் கற்றறிந்த முறைகள், பாவத்தைப் போக்கும் வழிகள் எவற்றிலும் திருப்தி அடையாத யுதிஷ்டிரன் மீண்டும் ஞானம் பெற வருகை தந்துள்ளான், பீஷ்மர் எனும் நித்யமாய் அன்பு இருக்கும் இடத்தில்.

இராமபிரான் வாலி சம்வாதம்

தண்டனை கொடுப்பதற்கு என்ன குற்றம் செய்தேன் என்று கேட்டாயே வாலி, ஆம் நீ தவறுகள் செய்துள்ளாய். சரணம் என்று உன்னிடம் பணிந்து நாட்டை ஒப்படைத்த சுக்ரீவனை ஓட ஓட அடித்தாய், இது மாபெறும் குற்றம். சரணமென்று பணிந்தார்க்கு அபயம் அளிக்க வேண்டியது அரசனின் கடமை, நீ அதிலிருந்து தவறி பெரும் தவறிழைத்தாய். அதற்காகவே தண்டனை.

Scroll to top